search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிரடி சோதனை"

    • மணப்பாறையை சேர்ந்த தர்மலிங்கம், சுரேஷ்குமார் ஆகியோரிடம் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 3,500 இருந்தது கண்டறியப்பட்டது.
    • ஆவணம் ஏதும் இல்லாத காரணத்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்றத் தொகுதி பகுதிகளில் அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். குளித்தலை அருகே கரூர் முதல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மருதூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனை மேற்கொண்ட போது பெட்டவாயிலிருந்து மணப்பாறை நோக்கி சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த தர்மலிங்கம், சுரேஷ்குமார் ஆகியோரிடம் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 3,500 இருந்தது கண்டறியப்பட்டது,

    தொடர்ந்து மருதூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனை மேற்கொண்ட போது மற்றொரு வாகனத்தில் வந்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் ஜீவா தெரு கலைவாணன் என்பவரிடம் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது கண்டறியப்பட்டது. சரியான ஆவணம் ஏதும் இல்லாத காரணத்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்பு அந்த பணம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குளித்தலை ஆர்.டி.ஓ. தனலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.

    அப்போது குளித்தலை வட்டாட்சியர் மற்றும் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ், குளித்தலை வருவாய் ஆய்வாளர் ஸ்ரீவித்யா மற்றும் காவல்துறையினர் இருந்தனர்.

    • சோதனையில் ரூ .50 கோடி வரையில் லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டிருக்கும் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
    • அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அந்த ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    சென்னை:

    சென்னை புளியந்தோப்பு பின்னி மில்லுக்கு சொந்தமான 14 ஏக்கர் இடத்தை கடந்த 2015-2017ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது 2 கட்டுமான நிறுவனங்கள் விலைக்கு வாங்கியுள்ளன.

    லேண்ட் மார்க் ஹவுசிஸ், கே.எல்.பி. ஆகிய 2 கட்டு மான நிறுவனங்கள் மேற்கண்ட இடத்தை வாங்கிய போது அரசியல் பிரமுகர் கள் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 2 கட்டுமான நிறு வனங்களிலும் வருமான வரிதுறை அதிகாரிகள் வரி ஏய்ப்பு புகாரின் பேரில் நடத்திய சோதனையில் ரூ .50 கோடி வரையில் லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டிருக்கும் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    வருமான வரிதுறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது கட்டுமான நிறுவனங்கள் யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்து உள்ளன என்கிற பட்டியல் கிடைத்தது. இதில் அ.தி. மு.க. முன்னாள் எம்.பி.க் கள் உள்பட அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அந்த ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    இதன்மீது கோர்ட்டு உத்தரவின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த வாரம் இந்த விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லஞ்ச ஒழிப்பு போலீசார் கட்டுமான நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில் 2 கட்டுமான நிறுவனங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

    தி.நகர் சரவணா தெருவில் உள்ள லேட்மார்க் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் கே.எல்.பி. கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    நுங்கம்பாக்கம் கோத்தாரி தெருவில் உள்ள கட்டுமான நிறுவன அதிபர் சுனில், மற்றும் வேப்பேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மனிஸ் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடை பெற்றுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடை பெறும் இந்த சோதனையில் 50-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் அரசியல் பிரமுகர் ஒருவரின் ஆடிட்டர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை நடை பெறும் இடங்களில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ரூ.50 கோடி லஞ்ச விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையை தொடர்ந்து அமலாக்கத் துறையினரும் சோதனை நடத்தி வருவதால் அரசியல் பிரமுகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    • பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
    • டிபன் பாக்ஸ் வடிவில் மர்ம பொருளை கண்டெடுத்தனர்.

    சென்னை:

    சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேற்று மாலை மர்ம நபர்கள் மூலம் மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என குறிப்பிட்டிருந்தது. குறிப்பாக பொது மக்கள் அதிகம் கூடும் இடமான எலியட்ஸ் கடற்கரை மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் வெடி குண்டுகள் வெடிக்கப் போவதாக கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து சென்னையில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு அந்தந்த காவல் நிலைய எல்லைக்குள் காவலர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

    அதேபோல் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா கடற்கரை, சென்ட்ரல் ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர சோதனை ஈடுபட்டனர்.

    மேலும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள நினைவுச் சின்னம் அருகே டிபன் பாக்ஸ் வடிவில் மர்ம பொருளை கண்டெடுத்தனர். அதில் வெடிகுண்டு இருக்கிறதா என்பது குறித்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டு பிடிக்கும் கருவிகளைக் கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய இந்த சோதனை நடந்தது.

    பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புடன் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் கடற்கரை முழுவதும் சோதனை நடத்தினர். மர்ம பொருள் வெடிகுண்டு இல்லை என்பது உறுதியானது.

    மேலும் டி.ஜி.பி. அலுவலகத்தில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் எலியட்ஸ் கடற்கரை தவிர மற்ற 29 இடங்களில் உள்ள வெடிகுண்டுகளை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் 2500 பிட்காயின் அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    100-க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டும் எந்த வெடி பொருளும் சிக்காததால் காவல் துறையினர் சோதனையை முடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர். இருப்பினும் சென்னை போலீசாரை வெடிகுண்டு மிரட்டல் கலங்கடித்துவிட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படு கிறதா? என கடை கடையாக சென்று சோதனை செய்தார்.
    • போதைப்பொருள் விற்பதாக அறிந்தால் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    மணவாளக்குறிச்சி :

    மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் நேற்று மணவாளக்குறிச்சி மற்றும் மண்டைக்காடு பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை மற்றும் குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படு கிறதா? என கடை கடையாக சென்று சோதனை செய்தார்.

    மேலும் கடைகளில் போதைப்பொருட்கள் விற்கக்கூடாது. போதைப்பொருள் கேட்டுவரும் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் பற்றி சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்துபவர் பற்றி அறிந்தால் அதுபற்றி தகவலை தெரிவிக்க வேண்டும், தகவல் தெரிவிப்பவர்கள் பெயர் ரகசியம் பாதுகாக்கப்படும். மேலும் கடைகளில் போதைப்பொருள் விற்பதாக அறிந்தால் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    • சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த தந்தங்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
    • தொடர்புடையவர்களை மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் இருந்து யானை தந்தம் கடத்தப்படுவதாக தூத்துக்குடி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதைத்தொடந்து அங்கு சென்று குறிப்பிட்ட ஒரு இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 23 கிலோ எடையில், 2 தந்தங்கள் பறிமுதல் இருந்தது. இதைத்தொடர்ந்து யானை தந்தங்கள் பறிமுதல் செய்து அங்கிருந்த ராஜபாளையம் பி.எஸ்.கே. நகரை சேர்ந்த முருகன் (வயது 34) உள்ளிட்ட 2 பேரை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் 2 பேரையும் ராஜபாளையம் சுங்க இலாகா அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது முருகன், சுங்க அலுவலக கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதனால் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவரை ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த தந்தங்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ. 6 கோடி என கூறப்படுகிறது.

    பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் மேலும் 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் யார்? என விசாரணை நடத்தி அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இந்நிலையில் யானை தத்தங்கள் பதுக்கிய சம்பவத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கார்த்திகேயன், வினித்குமார் ஆகியோரை போலீசார் இன்று பிடித்து கைது செய்தனர். இதில் தொடர்புடையவர்களை மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கிருந்த நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.
    • லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சைமன் நகர் பகுதியை சேர்ந்தவர் தாணுமூர்த்தி (வயது 58). இவர் தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் சார்பதிவாளராக வேலை பார்த்து வருகிறார்.

    தாணுமூர்த்தி கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக வேலை பார்த்து வந்தார். அப்போது 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் லட்சக்கணக்கில் பணம் சிக்கியது. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கிருந்த நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் தாணு மூர்த்தி மீது நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சார்பதிவாளர் தாணுமூர்த்தி மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து அவரது வீடுகளில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள 2 இடங்களில் லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. ஹெக்டேர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் இன்று காலை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில் சைமன் நகர் பகுதியில் உள்ள சார்பதிவாளர் தாணுமூர்த்தி வீட்டிற்கு இன்று காலை 7.30 மணிக்கு இன்ஸ்பெக்டர் பெஞ்சமின் தலைமையில் போலீசார் சென்றனர். வீட்டில் சார்பதிவாளர் தாணுமூர்த்தி மற்றும் அவரது மனைவி இருந்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    வீட்டிலிருந்த ஆவணங்கள் குறித்த தகவல்களையும், சார்பதிவாளர் தாணுமூர்த்தியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கேட்டறிந்தனர். காலை தொடங்கிய சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. இதேபோல் திங்கள்நகர் காந்திநகரில் உள்ள தாணுமூர்த்தியின் மனைவி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரமா தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். காலை 7 மணிக்கு சோதனை தொடங்கியது. வீட்டில் இருந்த தாணு மூர்த்தியின் மாமனார், மாமியார் மற்றும் அவரது மனைவியின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    வீட்டிலிருந்த சில ஆவணங்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • குமாரபாளையம் போலீஸ் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ள 164 பேர் வீடுகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
    • பல வீடுகள் பூட்டப்பட்டிருந்தது. சில வீடுகளில் இருந்தவர்களிடம் கேட்டபோது அவர்கள் திருந்தி வேலைக்கு செல்வதாகவும் தற்போது எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடுவதில்லை எனவும் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு நகரம், ஊரகம், பள்ளிபாளையம், குமாரபாளையம் போலீஸ் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ள 164 பேர் வீடுகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    ஆய்வு

    இதன்படி இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், பாரதிமோகன், தீபா, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட குழு திருச்செங்கோடு நகர எல்லைக்குட்பட்ட 61 பேர், ஊரக போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 12 பேர், பள்ளிபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 30 பேர், குமாரபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட 23 பேர் என 164 பேர் வீடுகளில் ஒரே நாளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    திருந்தி வாழ அறிவுரை

    அப்போது பல வீடுகள் பூட்டப்பட்டிருந்தது. சில வீடுகளில் இருந்தவர்களிடம் கேட்டபோது அவர்கள் திருந்தி வேலைக்கு செல்வதாகவும் தற்போது எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடுவதில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் வீடுகளிலும் இருந்தவர்களிடம் வேறு ஏதாவது குற்ற செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் எனவும், திருந்தி வாழ அறிவுறுத்துங்கள் எனவும் குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்தனர்.

    ஆயுதங்கள் பறிமுதல்

    இந்த 164 பேரும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள். ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ள இவர்கள் வேறு ஏதாவது நடவ டிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன் அதிரடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டதன் பெயரில் நேற்று ஒரே நாளில் அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களை கொண்டு இந்த ஆய்வு மேற்கொட்டப்பட்டது.

    அதில் சில இடங்களில் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குற்றப்பின்னணி உள்ள வர்களின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஆய்வு செய்யப்பட்ட அனைத்து குற்றப் பின்னணி கொண்டவர்களையும் அந்தந்த போலீஸ் நிலையங்களில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    • ஆய்வின் போது காலாவதியான சவர்மா கண்டறியப்படவில்லை.
    • தரமான வகையில் சவர்மா தயார் செய்யப்படுவதையும் விற்பனை செய்வதையும் உறுதிசெய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரிலும் கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அறிவுறுத்தலின் பேரிலும் கொடைக்கானல் நகரில் சவர்மா தயாரிக்கும் உணவகங்களில் கொடைக்கானல் நகராட்சி நகர்நல அலுவலர் தினேஷ் குமார் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் லாரன்ஸ் ஆகியோர் இணைந்து ஆய்வு நடத்தினர்.

    ஆய்வின் போது காலாவதியான சவர்மா கண்டறியப்படவில்லை. சவர்மா தயாரிப்பாளர்கள் சுகாதாரமாகத் தயாரிக்க வேண்டும், பழைய இறைச்சிகளைப் பயன்படுத்தக்கூடாது, முழுவதும் வேகவைத்த பின்னரே அதனை விற்பனை செய்ய வேண்டும் எ ன அறிவுறுத்தப்பட்டது.

    தரமான வகையில் சவர்மா தயார் செய்யப்படுவதையும் விற்பனை செய்வதையும் உறுதிசெய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். தரமற்ற சவர்மா தயாரித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவுப் பாதுகாப்புத்துறையினர் எச்சரிக்கை செய்தனர். தொடந்து சவர்மா தயாரிப்பை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    ஆய்வின் போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய ஒரு உணவகத்துக்கு ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • 'ஆபரேஷன் விடியல்' என்கிற அதிரடி சோதனையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
    • 10-க்கும் மேற்பட்ட வீச்சரிவாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    சேதராப்பட்டு:

    புதுச்சேரியில் கஞ்சா விற்பனை மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 'ஆபரேஷன் விடியல்' என்கிற அதிரடி சோதனையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக வில்லியனூர் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் கொலை, கொள்ளை, திருட்டு வழிப்பறி, கஞ்சா விற்பனை போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.

    அதனை தடுக்க போலீசார் பல்வேறு வழிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குற்ற சம்பவங்களில் ஈடுபட பதுங்கி இருந்த பல்வேறு குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் புதுவை சட்டம் ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரசைதன்யா தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு வம்சீரதரெட்டி, வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலயன், சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் வில்லியனூர், மங்கலம் போலீசார் இன்று அதிகாலை கரிக் கலாம்பாக்கம், கோர்க்காடு உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ள குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளின் வீடுகளில் அதிரடி சோதனை மேற் கொண்டனர்.

    மேலும் குற்றவாளிகளின் வீடுகளில் கஞ்சா, ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை செய்தனர். அப்போது ரவுடிகளின் வீடுகள் மற்றும் வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்து வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட வீச்சரிவாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    இதனை தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து சென்றனர்.

    • வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள்.
    • போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    கொல்கத்தா:

    கத்தார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை 3.29 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 541 பயணிகள் இருந்தனர்.

    அப்போது ஒரு பயணி திடீரென எழுந்து விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூச்சலிட்டார். இதனால் மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்,

    இது பற்றி உடனடியாக மத்திய தொழில்பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர் வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள். ஆனால் இந்த சோதனையில் வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதை அறிந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இதையடுத்து போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பக்கத்தில் இருந்த ஒருவர் தன்னிடம் இதுபற்றி கூறியதாக தெரிவித்தார்.

    உடனே போலீசார் அவரது தந்தையை விமானநிலையத்துக்கு வரவழைத்து விசாரித்த போது அந்த பயணிக்கு சற்று மனநலம் பாதிக்கப்ட்டு இருந்தது தெரியவந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாக தந்தை தெரிவித்தார்.

    அந்த பயணி செய்த களேபாரத்தால் லண்டன் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    • அதிக பாரம் கனிமவளம் ஏற்றி சென்ற லாரிகளுக்கு அபராதம்
    • கலெக்டர் உத்தரவின் பேரில் நடவடிக்கை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த சிறப்பு குழு அமைத்து, கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேது ராமலிங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பு அலுவலர்கள் குழு நேற்று மாலை முதல் இரவு வரை அதிக அளவு பாரம் ஏற்றி செல்லும் வாக னங்களை கண்காணித்தனர்.

    நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சசி, அப்துல் மன்னார் உள்ளிட்ட சிறப்பு அதிகாரிகள் குழு, ஜெகதா மற்றும் காவல்துறை அலுவலர்கள் அப்டா மார்க்கெட் அருகே 37 வாகனங்களை இடைமறித்து சோதனையிட்டதில், 7 வாகனங்களில் கொள்ளள வுக்கு அதிகமாக கனிமங்கள் கொண்டு செல்வது கண்டறியப்பட்டது.

    அதில் 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 4 லாரி உரிமையாளர்களுக்கு தலா ரூ.45 ஆயிரம் வீதம் ரூ.1.80 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி, வீரமார்த்தாண்டபுரம் மற்றும் குமாரபுரம் கிராமங்களிலும் வாகன சோதனை நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து வட்டாட்சியர் (நிலம் கையகப்படுத்துதல்) சேகர் தலைமையிலான சிறப்பு குழுவினர் மணலி, படந்தாலுமூடு அருகே கனிமங்கள் ஏற்றிச்சென்ற 10 வாகனங்கள் மற்றும் உதவி புவியியல் ஆய்வாளர் தலைமையில் படந்தாலுமூடு, செங்கவிளை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதில் 9 வாகனங்கள் அதிக அளவு கனிமம் ஏற்றி சென்றது கண்டறியப்பட்டது.

    மொத்தமாக கனிமங்கள் ஏற்றிச் சென்ற, 56 வாகனங்களை, சிறப்பு அதிகாரிகள் குழு மறித்து சோதனையிட்டதில், 7 வாகனங்களில், கொள்ளளவுக்கு அதிகமாக கனிமங்கள் கடத்தப்பட்டது கண்ட றியப்பட்டு, 7 வாகனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்று தொடர்ந்து அதிக பாரம் ஏற்றும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

    • பாலாட்டா அகதிகள் முகாமில் இன்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம் அதிரடி சோதனை நடத்தினர்.
    • 3 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதில் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் போராளி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் உள்ள பாலாட்டா அகதிகள் முகாமில் இன்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம் அதிரடி சோதனை நடத்தினர்.

    அவர்கள் முகாமுக்குள் புல்டோசர் களுடன் புகுந்தனர். இதனால் இஸ்ரேல் ராணுவத்துக்கும்-பாலஸ்தீனர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 3 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

    ×